வவுனியாவில் போதை மாத்திரைகளுடன் நான்கு இளைஞர்கள் கைது!

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

வவுனியா மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த விசேட தகவலையடுத்து வவுனியாவின் பல்வேறு இடங்ளில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 4 இளைஞர்கள் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 150 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டுளள்ளன.

அந்தவகையில், திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரிடம் இருந்து 80 போதை மாத்திரைகளும், அதே பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு இளைஞரிடம் இருந்து 30 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் இருந்து 20 போதை மாத்திரைகளும், லக்சபானா வீதி, கத்தார் சின்னக்குளம் பகுதியைச் சேர்நத இளைஞா ஒருவரிடம் இருந்து 20 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து மேற்படி நான்கு இளைஞர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.